முதன்மைச் செய்திகள்
தாயக விடுதலைக்காக போராடி 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவு
[வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 19:01 GMT+01:00] [விடுதலைப்புலிகள்]
தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1987 முதல் 20.11.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். இவர்களில் 17,496 ஆண் மாவீரர்களும், 4894 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர். 2008ம் ஆண்டு இதுவரை 2239 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். இதேவேளை 379 கரும்புலிகளும் இதில் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[மேலும்]
தமிழினப் படுகொலைக்கு எதிராக மொரிசியஸ் தமிழர்கள் போராட்டம்
[வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 19:22 GMT+01:00] [இன்போதமிழ்]
மொறிசியசில் நேற்று வியாழக்கிழமை ஈழத் தமிழ் மக்களின் படுகொலைக்கு எதிராக பெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மொறியஸ் தமிழ் ஆலயங்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்
[மேலும்]
வன்னியில் சுகாதார நிலைமை மோசம் தொற்று நோய்கள் பரவும் பேராபத்து! - ஐ.நா. அபாய எச்சரிக்கை
[வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 19:10 GMT+01:00] [இன்போதமிழ்]
"வன்னியில் தற்போது கடும் மழை பெய்வதால் அங்குள்ள அகதிகள் தங்குமிட வசதிகள் இன்றிப் பெரும் அவலங்களை எதிர்கொள்கின்றனர். மழையால் அங்கு சுகாதார நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. பல்வேறு தொற்றுநோய்கள் பரவக்கூடிய பேராபத்து நிலை காணப்படுகிறது."
[மேலும்]
பிந்திய செய்திகள்
சிறிலங்கா அரசைக் கண்டித்து வன்னியில் மக்கள் தன்னெழுச்சிப் பேரணிகள்
[21 நவம்பர் 2008, 19:06 GMT+01:00] [இன்போதமிழ்]
வன்னியில் சிறீலங்கா அரசு வல்வளைப்புத் தாக்குதலை நடத்திவரும் அதேவேளை, மக்களிற்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருட்களை தடுத்து மனித அவலத்தை ஏற்படுத்தியிருப்பதைக் கண்டித்து மக்கள் தன்னெழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியுள்ளனர்.
[மேலும்]
 
ஸ்பெய்னில் “நாடுகள் அற்ற தேசிய இனங்கள்” மாநாடு
[20 நவம்பர் 2008, 21:29 GMT+01:00] [புதினம்]
இந்த மாநாட்டில், பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரனும் கலந்துகொண்டு தமிழீழ மக்களின் சரித்திரம், முறிவடைந்த பேச்சுவார்தைகளும் உடன்படிக்கைகளும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன், இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் தற்போதைய மனித உரிமை, மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் உரையாற்றினார்.
[மேலும்]
 
19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் புலிகளின் குரல் வானொலி
[20 நவம்பர் 2008, 21:23 GMT+01:00] [இன்போதமிழ்]
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணித்திற்கு அமைய தாயக விடுதலைப் போராட்டத்துக்கான கருத்துருவாக்கப்பணியை ஆற்றிவரும் புலிகளின் குரல் வானொலி 19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கின்றது.
[மேலும்]
 
இலங்கைக்கான சகல இராணுவ உதவிகளையும் நிறுத்தி போராட்டத்தை டில்லி அங்கீகரிக்கவேண்டும்
[20 நவம்பர் 2008, 06:13 GMT+01:00] [இன்போதமிழ்]
உள்நாட்டு யுத்தத்தில் தீர்க்கமான வெற்றி குறித்து இலங்கையின் இராணுவம் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கின்றது. ஆனால் நடேசன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று இந்தியாவிலிருந்து வெளியாகும் "த வீக்' சஞ்சிகை தெரிவித்துள்ளது.
[மேலும்]
 
தமிழர்களின் தேசிய விடுதலையை , சுயநிர்ணயக் கோட்பாட்டை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டும் - பிரித்தானிய தமிழர்கள் கோரிக்கை
[20 நவம்பர் 2008, 05:47 GMT+01:00] [இன்போதமிழ்]
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பாகவுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழாகள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற சதுக்கத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:30 நிமிடம் தொடக்கம் மாலை 6:30 மணிவரை  நடைபெற்றது.
[மேலும்]
 
தமிழகத்தின் தொப்புள் கொடிகளே இங்கு சாகிறார்கள் என்று உணர்ந்து மனிதாபிமானத்துடன் செயற்பட மனங்கொள்ளக்கூடாதா?
[19 நவம்பர் 2008, 19:15 GMT+01:00] [இன்போதமிழ்]
இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும்போதே, சமாந்தரமாக அரசியல்தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கையில் போர் நடவ டிக்கையை ஆதரிக்கமுடியும் என்று கொள்கை வகுத்திருப்பதால், இந்திய மத்திய அரசு இதுவிடயத்தில் உரிய உணர்வுடன் செயற்படமாட்டாது என்றே நம்பலாம்.
[மேலும்]
 
நிவாரண பெருட்களை வன்னிக்கு கொண்டு செல்ல சிறிலங்கா படைத்தரப்பு புதிய கட்டுப்பாடு?
[19 நவம்பர் 2008, 19:06 GMT+01:00] [இன்போதமிழ்]
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது.
[மேலும்]
தமிழீழ காவல்துறை 17 ஆண்டுகள் சிறப்பு சேவை : 18வது ஆண்டில் காலடி
[20 நவம்பர் 2008, 21:35 GMT+01:00] [விடுதலைப்புலிகள்]
தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் (புதன்கிழமை) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்து, 18வது ஆண்டில் அது காலடி எடுத்து வைத்துள்ளது.இந்த நாளை முன்னிட்டு நேற்று மக்கள் நலன்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
[மேலும்]
 
மாவீரர் ஒவ்வொருவரின் பெற்றோர்களும் மதிப்பளிக்கப்பட வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின் வரலாற்றுக்கடமை ஆகும்.
[20 நவம்பர் 2008, 21:25 GMT+01:00] [இன்போதமிழ்]
மாவீரர்களின் ஈகத்தால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.
[மேலும்]
 
ஈழத்திற்கு என்ன தீர்வு ?
[20 நவம்பர் 2008, 20:31 GMT+01:00] [இன்போதமிழ்]
வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம். இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான்.
[மேலும்]
 
தமிழக அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இலங்கைப் பிரச்சினையில் வெறும் கபடநாடகம் தான் நடக்கிறது - தினமணி நாளேடு கண்டனம் .
[20 நவம்பர் 2008, 06:06 GMT+01:00] [இன்போதமிழ்]
தமிழக கட்சிகள் ஒன்றாகக் கூடி நின்றால், மத்திய அரசுக்கு ஏற்படும் நெருக்கடி நமக்கும் ஏற்படும் என்று இலங்கை அரசு உணர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கும். தமிழக அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இலங்கைப் பிரச்சினையில் வெறும் கபடநாடகம் தான் நடக்கிறது
[மேலும்]
 
"கிழக்கின் உதயத்துக்கு நேர்ந்த கதியே வடக்கின் வசந்தத்துக்கும்'
[19 நவம்பர் 2008, 19:19 GMT+01:00] [இன்போதமிழ்]
பாராளுமன்றத்தில் இடம்பெற்றவரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் ஆற்றிய உரை
[மேலும்]
 
இலங்கையில் நடப்பது என்ன?: மாணவர் கூட்டமைப்பு தமிழ்நாடு முழுவதும் 14 நாட்கள் சுற்றுப்பயணம்
[19 நவம்பர் 2008, 19:09 GMT+01:00] [புதினம்]
தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் மாணவர்கள் வேன் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
[மேலும்]
 
போரை நிறுத்துறுமாறு வலியுறுத்தி வைகோ உண்ணாநிலை போராட்டம்
[19 நவம்பர் 2008, 19:03 GMT+01:00] [இன்போதமிழ்]
இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
[மேலும்]
சிறப்புச் செய்திகள்
விடுதலைப் புலிகள் எந்த அரசுகளையும் நம்பி போராட்டம் நடத்தவில்லை - யோ.செ.யோகி
விடுதலைப் புலிகள் எந்த அரசுகளையும் நம்பி போராட்டம் நடத்தவில்லை எனவும், யாராவது தமக்கு உதவினால் வரவேற்போம் எனவும், அதேநேரத்தில் எந்த அரசாவது எதிர்த்தால் அதற்கு எதிராகப் புலிகள் போராடுவார்கள் எனவும் யோகி திட்டவட்டமாகக் கூறினார்.
[மேலும்]
நீண்ட காலத்திற்கு நாங்கள் இவ்வாறு வாழப் போவதில்லை. நிச்சயமாக நாங்கள் வெல்வோம். க.வே.பாலகுமாரன்
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வரலாற்றின் சிறப்பு பக்கமாக மாவீரர்நாள் நிகழ்வுகள் அமைகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.எமது மாவீரர்களின் ஈக ஒளியில் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
[மேலும்]
அநீதி எப்போதும் நிலைக்காது நீதிக்கான; ஒளி என்றோ ஒரு நாள் பிறந்தே தீரும்.
ஈழத்தமிழர்களின் பிரச்சினையை முழுமையாகத் தீர்ப்பதற்கு மூன்று வழிமுறைகள் இருக்கின்றன. அவர்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை வழங்குதல், அவர்கள் பிரிந்து சென்று தனி அரசை அமைக்க அனுமதித்தல், இந்த நாட்டிலிருந்து தமிழர்களை அடியோடு கொன்றொழித்துவிடுதல், இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யாவிடில்?
[மேலும்]
யாரும் எதிர்பார்க்காததை, எதிர்பார்க்காத நேரத்தில் செய்வதே புலிகளின் வெற்றி .
நிலப்பரப்புகளை கைப்பற்றுவதென்பது போரியல் துறையில் தற்காலிக வெற்றியாகவே கருதப்படுகின்றது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான படையி னரையும் உலக வல்லரசுகளின் ஆயுத தள பாட ஒத்துழைப்புகளையும் கொண்ட ஒரு இராணுவத்துடன் சில ஆயிரம் பேரைக் கொண்ட புலிகள் அமைப்பு போராடி வருகின்றது.
[மேலும்]
புலிகளின் பின்நகர்வுகள் அனைவர் மத்தியிலும் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு புலிகளால் மட்டுமே பதில் கூற முடியும்.?
புலிகள் குறித்த அனைவரது கணிப்புகளும் தவறாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்து ள்ளது. 30 வருடகால ஆயுதப் போராட்டம் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. புலிகளின் பின்நகர்வுகள் அனைவர் மத்தியிலும் எழுப்பியுள்ள இந்தக் கேள்விக ளுக்கு புலிகளால் மட்டுமே பதில் கூற முடியும்.
[மேலும்]