எம்மைப் பற்றி
"நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ"

சுவிஸ் சமூகத்துக்குள் தமிழ் ஊடகத்துறையின் புத்தம் புதியதொரு தோற்றுவாயாக இன்போ தமிழ் இணைய பல்மொழிச்செய்திச் சேவை 2006ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி உருப்பெற்றது. சுவிஸ் சமூகத்துக்கு , சுவிஸ் தமிழ்ச் சமூகத்தினால் தமிழீழ மக்களினதும் மண்ணினதும் செய்திகள் சென்றடைவது அரிதாகிய சூழலில் பலசவால்களை எதிர்கொண்டு எண்ணிக்கையிலும் செய்தித்தரத்திலும் முதன்மைபெறும் பல்மொழிச் செய்திச் சேவைச் சேவைகளில் இன்போதமிழ் முன்னணி இடம் வகிக்கிறது.

தாய்நாட்டின் நிலவரப் பிரதிபலிப்பாகவும் புலம்பெயர்ந்த தமிழுறவுகளின் தொடர்பூடகமாகவும் எமது செய்திச்சேவை தொழிற்படுகிறது. புகலிட வாழ்வு முழுமை பெறவும் தாயக உணர்வு வலுப்பெறவும் இன்போதமிழ் செய்திச் சேவை முனைப்போடு செல்நெறி தவறாது செய்திச் சேவையினை வழங்கி வருகிறது. சுருங்கக் கூறின் சுவிஸ் ஊடக சமூகத்திற்கும் சுவிஸ் மக்கள் சமூகத்துக்கும் புலம்பெயர்வாழ் இனிய தமிழுறவுகளுக்கும் தமிழீழத் தாயகத்தை முன்னிறுத்தும் ஊடகக் கருவியாக இன்போதமிழ் செய்திச் சேவை தகவலூடகப்பணி ஊடாக உறவுப்பாலத்தை உருவாக்கி தன்பணியாற்றும் . பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் வீழமாட்டோம் என முழக்கமிட்டு... வேகமாக வளர்ந்துவரும் இன்போதமிழ் செய்திச்சேவை மிகப் பரந்தளவு வாசகர் தளத்தைக் கொண்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் மொழிமாற்றம் செய்து வழங்கும் பணியை அது ஆரம்ப நாட்தொட்டுத் தன்பால் கொண்டுள்ளது. துல்லியம், நம்பகத்தன்மை, ஆதாரம், பக்கச்சார்பின்மை, வேகம் என்ற ஐந்து வகை சிறப்புக்களைக் கொண்ட இன்போதமிழ் இணையச் சேவை சுவிஸ் மக்கழுடன் தன்னின அடையாளம் பேணும் எமது சந்ததிக்கும், செய்திச் சேவையூடாக வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் அமைந்து தனக்கென அமைத்துக் கொண்ட இலட்சிய வரம்புகளை மீறாது தொடர்ந்தும் செல்நெறி தவறாது சிறப்பாக பணி புரியும்.

செய்திகளைத் தாங்கிச் செல்லும் மொழி தக்க பிரமாணத்தில் அமையவேண்டும் என்ற விதிமுறைக்கு அமைவாகப் பொறுப்புணர்வுடன் எமது நிறுவனம் ஊடகப்பணிமனை சுவிஸ் செயற்படுகிறது. பிறமொழி கலவாத் தமிழை எமது செய்தி வழங்கலில் மொழிமாற்றம் செய்து வெளிக்கொணர்கின்றோம். "கண்வழி, செவிவழி எதுவோ அதுவே சொல்மொழி" என்பது சான்றோர் வாக்கு. கண்ணால் பார்த்த, காதால் கேட்ட மொழிதான் பேச்சுமொழியாகத் தொடர்கின்றது. தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு முக்கிய கடமை இருக்கிறது. மறைந்து போகும் நல்ல தமிழ்ச் சொற்களை மீண்டும் பாவனைக்குக் கொண்டுவரும் பொறுப்பு அதற்கு இருக்கிறது. மொழி வளர்ச்சியில் இன்போதமிழ் செய்திச் சேவை தீவிர கவனம் எடுத்து மொழிசார் , துறைசார் பிரதிநிதிகளுடன் . உலகத்தின் திசை எங்கும், எமக்காய் எங்களுக்காய் குரல் தரவல்லோரை செய்தித் தொடர்பாளர்களாய், ஆக்குவோராய் ஆதரவுக்கரம் தருவோராய் இணைத்து இறுகப்பற்றி தொடர்ச்சியாக இயங்கும் 24 மணிநேரச் செய்திச் சேவையூடே தேசத்தின் குரலை செய்தித் தளத்தினூடே வெளிக்கொணர களமமைத்துள்ளோம்.
 
இன்போதமிழ் நிர்வாகம்
2009-07-11 00:01:50
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. கறுப்புக்கு தெரியுமோ எங்கள் கண்ணீர்
  2. இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?
  3. தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
  4. சட்டத்திற்கு கட்டுப்பட்டு நிற்குமா? காமம்
  5. சிங்கள தேசத்தில்: 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு': யாரைத் திருப்திப்படுத்த..?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  2. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  3. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
  4. தாய் நிலம்: தன் இனத்தை அழித்து விடுதலை நெருப்பை அணைப்போர்க்கு வரலாறு தீர்ப்பெழுதும்......
  5. விடுதலைப் புலிகள் தனிமனித சொத்தல்ல: "சுருக்கமாக சொன்னால்" அது தமிழ் மக்களினுடைய உயிரிலும் மேலான சொத்தாகும்"
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  2. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  3. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. கவிஞர் சேரன் சொல்கிறார்: தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்று
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல