வியாபக விருட்சத்துக்கு விடை கொடுக்க முடியவில்லை என சுவிஸ் தமிழர் பேரவை இரங்கற்பாவூடே தேசியத்தலைவரின் தந்தைக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளது.
எங்கள் வியாபக விருட்சத்துக்கு விடை கொடுக்க முடியவில்லை மாமனித மகுடம் நீ மறைந்து போகவில்லை

படம் நன்றி புதினம் நியூஸ்
விடியாத தேசத்துக்கு விளக்கேற்றி வைத்த வடிவே வேங்கடவன் பெற்ற வேலுப்பிள்ளை எனும் உருவே வெற்றித் திலகமிடும் விடுதலைப் பேரொளியை வேங்கை யெனத்தந்த வேந்தே
சென்றுவா என்று சொல்லமுடியவில்லை சென்ற இடமெல்லாம் வென்றுவரும் திருவை தந்தவனே எம் நெஞ்சுபட்ட காயம் நீங்கும் முன்னாலே வள்ளலே ஏன் வாய்மூடிக்கொண்டாய்
எத்தனை பேருக்கு எங்கள் தேசம் மலரோடு மாமனிதர் மகுடம் சூட்டியது. கொற்றவனைத் தந்த குலவிளக்கே குடியிருந்தவிடமெல்லாம் கொடும் பகைவன் கால்பட்டுக்கிடக்கிறது
நெஞ்சு குன்றாத நாங்கள் நேரிழை தந்து, நெருப்பு மூட்டுகின்றோம் ஜம்பத்தி நான்கில் அன்னை மண்ணுக்கு அணையா விளக்குத் தந்தவனே
இருண்ட எம் தேசத்துக்கு ஒளியேற்றி வைத்தவனே இரண்டாயிரமாம் ஆண்டின் ஈரைந்து தன்னில் நிமிர்வோம் எனவிருந்த வேளை நீ நெருப்பேற்றி வைத்து நீண்ட தூரம் போகின்றாய்
நெஞ்சு கனக்கிறது நினைவு தடுமாறிப்போகிறது வஞ்சம் கொண்ட வாழ்வால் வாய்விட்டுக்கூட கதறியழமுடியவில்லை வாழ்வு இப்படி யாகுமென்று யார்தான் முடுவுசெய்தார்
கரிகாலச் சோழனின் கருப்பொருளே கல்லறைகள் கருத்தரிக்கும் விழிமூடித்தூங்குகின்ற எங்கள் வேங்கைகளின் உதிரத்தில் வேலுப்பிள்ளை நாமம் விடுதலைத் தீமூட்டும்
பார்வதித்தாய் பகலவனைக் கருவில் சுமந்த நாள் கண் விழித்தாள் கடார புரத்துத் தாய் ஜம்பத்தியாண்டுகாலம் தன் மடிசுமந்த மாமணியை சுற்றிவர எதிரி சூழ்ந்ததனால்
உருமறைப்புச் செய்து ஊர்விட்டு அனுப்பிவிட்டாள் வேங்கை மகன் வீடுதிரும்பும்போது வேலுப்பிள்ளையின் கல்லறை விடுதலைப்பேரொளியால் வியாபகம்பெறும்.
அதுவரை அண்ணலே அன்னை மண்ணில் நீயுறங்கு நாடொன்றே நாடித் தன் நலமொன்றும் நாடா, நாயகனே போர்க்கோலம் பூணும் புகழ் மிகுந்த மண்ணில் தேர்க் கோலம் காணும் திருவே
தீருவில் வெளியில் தீயாகும் சுடரே வாய்தீ யிற் புதைந்துபோக வல்லைமண் என்னபழி செய்ததுவோ ஏனிந்த நிலைதகுமோ
கூற்றுவன் தன் அழைப்பதனைக் கொடுத்தவுடன் கொடுஞ்சிறையில் குலவிளக்கு அணைந்ததுவோ விடுதலைப்பேரொளியின் வியாபக விருட்சம் வீழ்ந்து கிடப்பதுவோ
புகழ்பூத்த புல்லாங்குழலொன்று ஊதமுடியாத உருவமாய்க்கிடக்கிறது ஈழத்தாயின் ஈடிணையில்லா இதய நரம்பொன்று அறுந்து கிடக்கிறது
தாய்நிலத்து முற்றத்து தரவைச் சகனத்தில் எங்கள் ராஜா குயிலின் கூடுமட்டுமே கொள்ளி வைக்கப்படுகிறது
எங்கள் தந்தையே உன்னைத் தரிசிப்பதெப்படி சாவின் மாளிகைக்குச் சந்து கூடக்கிடையாது சதிகாரர் சன்னிதானமாய் சரித்திரப்பூமி சவக்காலைத் தெருவோடு சாய்ந்து கிடக்கிறது
உத்தமனே ஒன்றுமட்டும் உண்மை எம் சந்ததி சபதமெடுத்து நிற்கிறது தந்த செல்வா, தலைவன் காட்டிய பாதையில் போராடப் புறப்பட்டு நிற்கிறது
குனிந்த தேசம் நிமிர்வு பெறும் குமுறிய நெஞ்சு கொடிபிடிக்கும் வானத்து தேவர் வாழ்த்துரைப்பர் கோட்டையிலே உன்பிள்ளை கொடியேற்றுவான்
தாழ்வுற்ற தமிழுலகு தரணிபுகழேகும் தலைவன் பாசறைகள் படைகொண்டேகும் பார்வதி மணாளான் பாதத்திருவடிக்கு பூச்சொரிந்து தேசம் புறநானூறுபாடும்
அப்பேறு அரியாசனப்பொருளே வீதியெல்லாம் வெடிவெடித்து வேங்கடவன் மகனுக்கு வேத இசையிசைக்க வேலுப்பிள்ளை வரலாறு அவையேறும்
பார்வதியின் பரம்பொருளே சென்றுவா என்று சொல்ல முடியவில்லை செல்லும் இடமெல்லாம் வென்றுவரும் தலைவனோடு உனை வணங்கும் நாள்வரைக்கும் நெஞ்சில்நிறுத்தியுனை.....
தமிழர் பேரவை சுவிஸ்
சுவிஸ் தமிழர் பேரவை இரங்கற்பாவூடே |