சிறப்புச் செய்தி:
தேசியத் தலைமையை விலை பேசிய கூட்டமைப்பின் முகத்தில் கரியைப் பூசியுள்ள தமிழ்மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 08:36.12 பி.ப | இன்போ தமிழ் ]

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே வாக்களித்ததாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தனை வீதமானோர் வாக்களித்தனர் என்பது பற்றி இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதும், வடக்கு,கிழக்கில் சராசரியான வாக்களிப்பே இடம்பெறவில்லை.

குறிப்பாக தமிழ்மக்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்வேயில்லை.

சரத் பொன்சேகாவும், மகிந்த ராஜபக்ஸவும் தமிழ் மக்களுக்கு எதிராக கொடுமையான போரை நடத்தி அவர்களின் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளவர்கள்.

அத்துடன் இயல்பாகவே யாழ்ப்பாண மக்கள் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் நாட்டம் காட்டுவதில்லை.

அது இந்தத் தேர்தலிலும் நிரூபணமாகியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் 15- 20 வீதமான வாக்குகளே பதிவாகதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.1982ம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் எப்போதுமே 21 வீதத்துக்கு அதிகமான வாக்களிப்பு யாழ்ப்பாணத்தில் நடந்தது கிடையாது.

வன்னிப் பகுதியிலும், கிழக்கிலும் கூட தமிழ் மக்கள் பெரும்பாலும் வாக்களிக்கவில்லை என்றே தெரிகிறது.

இதற்குக் காரணம் பிரதான வேட்பாளர்கள் மீதான வெறுப்பும், இந்தத் தேர்தல் தமக்கு எந்தப் பயனையும் தரப் போவதில்லை என்ற எண்ணமும் தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் அதிகளவில் வாக்களிக்காது போனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கைகளிலும் இரத்தக் கறையைப் பூசிக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை தமிழ்மக்கள் உறுதியாக நிராகரித்திருக்கின்றனர்.

இது அவர்களுக்கு சரியானதொரு பாடமாக அமைந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு முரணாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் இந்தத் தேர்தலின் மூலமாவது உணர்ந்து கொள்ளட்டும்.

சரத் பொன்சேகாவுக்கு அதரவளிக்கும் கூட்டத்தில் மாவீரர்களுக்கு மெனஅஞ்சலி செலுத்தி அவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தியது கூட்டமைப்பின் உச்சக்கட்டத் துரோகமாகும்.

ஆயிரக்கணக்கான மாவீரர்களின் மரணத்துக்கு காரணமான சரத் பொன்சேகாவுக்கு வாக்குப் போடுமாறு கேட்கும் கூட்டத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி நீலிக்கண்ணீர் வடித்த கூட்டமைப்புக்கு யாழ்ப்பாண மக்கள் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்.

அத்துடன் தமிழ்மக்களின் விருப்பங்களை சரியான முறையில் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தையும் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார் என்பதல்ல முக்கியம்.

எந்தளவு வாக்குகள் பதிவாகின என்பதே முக்கியமானது.

யாழ்.மாவட்த்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 72 வீதமானோருக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

ஆனால் சுமார் 20 வீதமானோரே வாக்களிப்பில் பங்கேற்றிருப்பதானது மக்களின் மனநிலை என்னவென்பதை தெளிவாக இனங்காட்டியுள்ளது.

அதேவேளை, தமிழ்மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் எடுத்த முடிவு தவறானது என்பதை உணரத் தொடங்கியுள்ள நிலையில் கூட்டமைப்பு, தமக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை மறைக்க நீதியான தேர்தல் நடைபெறவில்லை என்று புதிய பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் நடந்த நாடாளுமன்ற, உள்ளுராட்சித் தேர்தல்களில் இடமபெற்ற அளவுக்குக் கூட வாக்களிப்பு நடக்கவில்லை.

முன்னரை விட அதிக அச்சுறுத்தல் தற்போது இருந்ததாகக் கூற முடியாத நிலையில் வாக்களிப்பு குறைந்ததற்கு வழக்கமான சப்பை நியாயங்களை கூறமுடியாது.

அச்சுறுத்தலால் வாக்களிப்பு குறைந்து போனதாகக் கூறி தமது முடிவின் தவறை நியாயப்படுத்த கூட்டமைப்பு முற்படுகிறது.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் தெளிவானதொரு கருத்தை சொல்லியுள்ளனர்.

  • தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் வதைத்தவர்களுக்கு தமது வாக்குகள் இல்லை என்பது ஒன்று.

    இந்தத் தேர்தல் சிங்கள தேசத்தின் தலைமையைத் தீர்மானிப்பதற்கானதே தவிர எமக்கானது அல்ல என்பது இரண்டாவது.

    இந்த யதார்த்தத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேலாவது புரிந்து நடக்குமா?

தேர்தல் களமுனையிலிருந்து கபிலன்

செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. கறுப்புக்கு தெரியுமோ எங்கள் கண்ணீர்
  2. இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?
  3. தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
  4. சட்டத்திற்கு கட்டுப்பட்டு நிற்குமா? காமம்
  5. சிங்கள தேசத்தில்: 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு': யாரைத் திருப்திப்படுத்த..?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  2. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  3. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
  4. தாய் நிலம்: தன் இனத்தை அழித்து விடுதலை நெருப்பை அணைப்போர்க்கு வரலாறு தீர்ப்பெழுதும்......
  5. விடுதலைப் புலிகள் தனிமனித சொத்தல்ல: "சுருக்கமாக சொன்னால்" அது தமிழ் மக்களினுடைய உயிரிலும் மேலான சொத்தாகும்"
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  2. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  3. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. கவிஞர் சேரன் சொல்கிறார்: தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்று
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல