ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டும்:
"சுதந்திரத்தை இழந்து நிற்கும்; தமிழ் மக்கள்"
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 12:01.01 பி.ப | இன்போ தமிழ் ]

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இலங்கைத்தீவு விடுபட்டு 62 ஆண்டுகள் நிறைவடைவதை சிங்களதேசம் இன்று பெருமெடுப்பில் கொண்டாடுகிறது. விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்து விட்ட வெற்றியின் திமிரில் இருந்து கொண்டு இந்தக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதேவேளை, ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இலங்கைத்தீவு விடுபட்டு 62 வருடங்களாகியும் அங்கு வாழும் தமிழர்கள் தமது சுதந்திரத்தை இழந்தவர்களாக- வாழ்விடங்களைத் தொலைத்தவர்களாக- தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்களாக-உறவுகளையும், சொத்துகளையும் தொலைத்தவர்களாக- நடைப்பிணங்கள் போன்று அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தநிலைக்கு காரணம் சிங்களப் பேரினவாதமே.

தமிழ் மக்கள் மீது கொடியபோரை ஏவிவிட்டு அவர்களை எதுவுமேயில்லாதவர்களாக மாற்றிவிட்டிருக்கிறது. தமிழ் மக்களை ஆயுதமேந்திய போருக்குள் தள்ளிவிட்டதும் சிங்களப் பேரினவாதமே அவர்களை ஆயுதப்போரில் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதும் சிங்களப் பேரினவாதமே.

  • தமிழ்மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராடிய போது அதைப் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தி இலட்சக்கணக்கான மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிட்டு, இன்று சிங்களதேசம் வெற்றிப் பெருமிதத்துடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

பிளவுபட்டிருந்த தேசத்தை ஒன்றாக்கி விட்டதான நினைப்பில் சிங்களப் பேரினவாத சக்திகள் இந்த நாளை தமது வெற்றியின் உச்சமென்று புகழ்ந்துரைப்பதையும் காணமுடிகிறது.

  • மூன்று தசாப்த காலப்போர் இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் உள்ளனவென்பதை உலகுக்கு காட்டியிருந்தது.

ஆனால் இன்று அந்த நிலையை மாற்றி விட்டதாக சிங்கள அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஒரேகுடையின் கீழ் நாட்டைக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் கூறிக் கொள்கிறது. ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுபட்ட தினத்தை சிங்களதேசம் கொண்டாடுகின்ற அதேவேளை தமிழ்மக்கள இந்தநாளை அத்தகைய பூரிப்பில் கொண்டாடும் நிலையில் இல்லை என்பதே உண்மை. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்தநாள் அப்படியானதொரு விடுதலையை- சுதந்திரத்தை ஒருபோதும் பெற்றுக் கொடுத்ததில்லை. அதை அவர்கள் அனுபவித்ததும் இல்லை.

காலத்துக்குக் காலம் இனக்கலவரங்களின் பெயரால் தமிழ்மக்கள் துரத்தப்பட்டதும் கொல்லப்பட்டதும் முன்னைய வரலாறாக இருந்தது. பின்னர் போரின் பெயரால் அதை நிறைவேற்றியது சிங்களதேசம். இப்போதும் ஒரு இட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்விடங்களை நெருக்கக்கூட முடியாத வகையில் தடுப்புமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். ஒருபக்கத்தில் அடிபட்ட காயங்களின் வடுங்களைச் சுமந்து, நடுத்தெருவில் நிற்கும் மக்கள், இனனொரு பக்கத்தில் அவர்களை வெற்றி கொண்ட திமிரில் இருக்கும் இனம்.

இருவேறு துருவங்களாக இருக்கும் இரண்டு மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஆழமான விரிசல் விழுந்து விட்டது. இப்படியான நிலையில் தமிழ்மக்களால் எந்தவகையிலும் இதையொரு சுதந்திர நாளாகக் கருதவே முடிவதில்லை. ஆங்கிலேய ஆக்கிரமிப்பில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்புக்கு கைமாறிய தினம் என்ற வகையினலான உணர்வே தமிழ்மக்களிடத்தில் மேலோங்கியிருக்கிறது.

இந்த உணர்வை சரியாகப் புரிந்து கொள்வதற்கு சிங்களத் தலைமைகள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அப்படி உணர்ந்திருந்தால்- இனப்பிரச்சினைக்கு உருப்படியானதொரு தீர்வைக் கண்டு தமிழ் மக்களை நிம்மதியாக வாழ வழிவகுத்திருந்திருப்பார்கள். ஆனால் சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகள் அனைத்துமே தமிழ்மக்களை அழிப்பதிலும், அவர்களைப் பாரம்பரிய தாயகத்தில் இருந்து துரத்துவதிலும் தான் தீவிரமாக இருந்து வருகின்றன. இந்த நிலையினால் தான் இலங்கைத்தீவு இரண்டு தேசங்களாகப் பிளவுபட்டு நிற்கின்றது.

பூகோள ரீதியாக, சிங்கள அரசு போரின் மூலம் இரு தேசங்களையும் இணைத்து வைத்திருப்பினும் இரு இனங்களுக்கும் இடையில் தோன்றி;விட்ட பிளவையும் இலகுவாக ஒன்றாக்கி விட முடியாது. இதை அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலும் உறுதிப்படுத்தியுள்ளது.

தென்னிலங்கை முழுவதும் ஏற்றுக் கொண்ட-ஆதரித்த மகிந்த ராஜபக்ஸவை தமிழர் தாயகப் பகுதி மக்கள் நிராகரித்துள்ளனர். அதைவிட பெரும்பாலான தமிழ்மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். சிங்கள தேசத்தின் இறைமையை நிராகரிப்பதாக- தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.இந்தத் தேர்தல் முடிவு தமிழர் தாயகத்துக்கும் சிங்களதேசத்துக்கும் இடையிலான பிளவை மிகவும் நுட்பமான முறையில் வெளிப்படுத்தியுள்ளது.

முப்பதாண்டு ஆயுதப் போராட்டத்தின் மூலம் கூறிய அதேசெய்தியை ஜனநாயக ரீதியான தேர்தலும் வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு புலிகள் கோரவில்லை. ஆனால் அதையே பெரும்பாலான மக்கள் செய்துள்ளனர். சிங்களதேசம் தமிழ்மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வை வழங்குவதற்கு மறுக்கின்ற போக்கில் இருந்து விடுபடாதுள்ள நிலையில் தமிழ் மக்களும் ஒன்றுபட்ட தேசமாக வாழுகின்ற மனோநிலைக்குத் திரும்மாட்டார்கள். இதையே தான் ஜனாதிபதித் தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.

தொல்காப்பியன்
வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. கறுப்புக்கு தெரியுமோ எங்கள் கண்ணீர்
  2. இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?
  3. தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
  4. சட்டத்திற்கு கட்டுப்பட்டு நிற்குமா? காமம்
  5. சிங்கள தேசத்தில்: 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு': யாரைத் திருப்திப்படுத்த..?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  2. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  3. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
  4. தாய் நிலம்: தன் இனத்தை அழித்து விடுதலை நெருப்பை அணைப்போர்க்கு வரலாறு தீர்ப்பெழுதும்......
  5. விடுதலைப் புலிகள் தனிமனித சொத்தல்ல: "சுருக்கமாக சொன்னால்" அது தமிழ் மக்களினுடைய உயிரிலும் மேலான சொத்தாகும்"
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  2. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  3. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. கவிஞர் சேரன் சொல்கிறார்: தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்று
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல