உரை அரங்கு:
தமிழினத்தின் பாதுகாப்பிற்கென்றே ஓர் உலகளவிலான பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்: போராசிரியர் இராமசாமி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:53.33 மு.ப | ஊடகப் பணிமனை ]

உலகத் தமிழர் பேரவையின் இரண்டுநாள் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து நேற்று கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் தொடங்கியது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்பேற்கும் இம்மாநாட்டினை புதியதமிழகம் கட்சியின் தலைவர் கே.கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்து தலைமையேற்று நடாத்துகிறார்.

இம்மாநாட்டை மலேசிய பினாங் மாநிலத்தின் துணை முதலமைச்சரும், நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற் குழுவின் உறுப்பினருமான பேராசியர் பி.இராமசாமி தொடக்கிவைத்து உரையாற்றினார்.

இம்மாநாட்டில், புலவர் புலமைப்பித்தன், மலேசிய நாட்டு எம்.பி குணசேகரன், தொழில் அதிபர் அருணாச்சலம், தமிழ் அறிஞர் பொன்னுரங்கம் உள்பட பலர் உரையாற்றினர்.

பேராசியர் பி.இராமசாமி தனது தொடக்க உரையில் தெரிவித்ததாவது:

உலகத் தமிழர்களின் பாதுகாப்பை பற்றி விவாதிக்க இங்கு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகமெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழனுக்கு, இழ்வளவு காலம் கழிந்து, இப்போதுதான் தனது பாதுகாப்பை பற்றி பேச வேண்டிய அவசியம் வந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் முடிந்த கசப்பான அனுபவங்களே இதற்கு முக்கிய காரணம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு கசப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. 2009-ம் ஆண்டு தமிழினத்தின் இருண்ட ஆண்டு என எடுத்துக்கொள்ளலாம்.

  • ஒரு தேசத்தில், தமிழினத்தின் தேசிய போராட்டம் ஒடுக்கப்பட்ட சம்பவமே அந்த சம்பவங்களில் முதன்மையானதாகும். தமிழன் என்றால் அடி மட்டுமே வாங்குபவன் என்பதை மாற்றி, அநியாயங்கள் எல்லை மீறும்பட்சத்தில் தமிழனுக்கு அடியும் கொடுக்கத் தெரியும் என்று நிரூபித்தவன் ஈழத்தமிழன்.

உலக வல்லரசுகள் பலவும் சேர்ந்து தமிழீழ தேசத்திற்கான அந்த போராட்டத்தை ஒடுக்கியதற்கு பிறகு, எந்த மக்களுக்கு அந்த விடுதலைப்புலிகள் இயக்கம் அரணாக இருந்ததோ, அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து விதமான துன்பங்களைக் கண்டு இன்று உலகத் தமிழினம் வெதும்பி போயுள்ளது. அந்த வெதும்பலின் வெளிப்பாடே இன்றைய மாநாடு.

நமது சொந்தங்கள் அங்கே சொல்லிலடங்கா துன்பங்களை அனுபவத்துகொண்டிருக்கையில் இந்த மாநாடு இங்கே நடக்கிறது. ஆனால், இன்றைய மாநாட்டின் நோக்கமானது, வெறும் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையை மட்டும் விவாதிக்கும் மாநாடாக இல்லாமல், உலகத்தமிழர்களின் ஒட்டுமொத்தமான பாதுகாப்பை பற்றி விவாதிக்கும் மாநாடாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பாகும்.

தமிழகம் தாய்த்தமிழகம் என்று உலகத்தமிழர்கள் எல்லாம் எப்போதும் போற்றும் இந்த தமிழகத்தால் கூட அந்த ஈழத்தமிழர்களின் துன்பத்தை துடைக்க முடியவில்லை என்பது தான் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத உண்மை.

இந்த ஆண்டு புதுதில்லியில் நடந்த பரவாசி மாநாட்டுக்கு எனக்கும் அதிகாரபூர்வ அழைப்புவிடுக்கப்பட்டது.

ஆடம்பர தங்கும் விடுதியில் அறை, முதல் வகுப்பு விமான டிக்கெட் ஆகியவையும் அந்த அழைப்பில் உள்ளடக்கப்பட்டது. இருந்தபோதும் அந்த மாநாட்டை புறக்கணித்தேன். என்னோடு சேர்ந்து மக்கள் கூட்டணையை சேர்ந்த சிலரும் புறக்கணித்தனர்.

நாங்கள் இந்த மாநாட்டை புறக்கணித்ததற்கு முழு காரணம், இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு போரில் இந்திய அரசின் பங்கும், அங்கே நடந்த கொலைவெறி படலத்தை தட்டிக்கேட்காத இந்திய பேரசின் இயலாமையுமே ஆகும்.

மேற்குறிப்பிட்ட காரணத்தை இந்தியாவின் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைச்சர் வயலார் ரவிக்கு நான் எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.

அதேதினத்தில் இன்றைய மாநாட்டுக்கு ஏற்பாட்டளாரான டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்தேன். இம் மாநாட்டில் பங்கேற்க முழு சம்மதத்தையும் தெரிவித்தேன்.

அதையடுத்து மறுநாள் மலேசிய தமிழ் நாளிதழ்களில் முதல்பக்கத்தில் செய்தி வெளியானது. அதில் கோவையில் ஜூன் மாதம் நடைபெறும் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கும் செய்தியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மலேசியாவில் இருந்து 80 பேராளர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களின் 25 பேர் பினாங்கு மாநில பேராளர்கள். தமிழ் தேசியத்தின் குரல்வலையை நெரித்துபோராட்டத்தை ஒடுக்கிய எந்தவொரு சக்திக்கும் நாம் அடிபணிந்துவிடக்கூடாது என்பது தான் மலேசிய தமிழர்களின் வேட்கையாகும்.

தமிழினத்துக்கென்று தனியொரு நாடடில்லாமல் நாம்படும் அவலங்கள் பல. இருந்தபோதும் அந்த துன்பங்கள் தனியும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் நாம் அறிவோம். அதேநேரத்தில் உலகளவில் பரந்து விரிந்து கிடக்கும் தமிழினத்தின் பாதுகாப்பு அம்சங்களை கலந்தாலோசிக்க மாநாடு ஒன்றில் நாம் இணைந்துள்ளோம்.

உலகம் முழுவதும் தமிழர்கள் பல்வேறான அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றோம். மலேசியா, சிங்கப்பூர், மவுரிசியஸ் என்று பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு அவரவர் வாழ்வுரிமை, மொழி ஆகியவற்றுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான விவகாரங்களையும் இம் மாநாட்டின் வழியாக விவாதிக்க வேண்டும். தமிழினத்தின் பாதுகாப்பிற்கென்றே ஒரு உலகளவிலான பாதுகாப்பு அமைப்பு ஒன்றையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

அதற்கெல்லாம் முதல்படிதான் இன்றைய நமது மாநாடு. ஆகவே, வெறும் கூடிப்பேசி, கலையும் கூட்டமைக இல்லாமல், ஆக்ககரமான விவாதங்களின் வழி நமது நோக்கத்தை நாம் அடைய வேண்டுமென்றே எதிர்பார்ப்போடு இன்றைய மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்துவைக்கின்றேன்.

மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

நன்றி: நெல்லை பொடியன் வலைப்பூ

ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. சிறீ லங்கா நாடாளுமன்றத்தில் கண்டதும் கேட்டதும்.........
  2. இரத்தக் கண்ணீர் வடிக்கபோகிறது சிறிலங்கா
  3. கரிகாலன் பிள்ளைகளே: புலிகளின் வீரமும் தியாகமும் பொய்யல்ல...மெய்யே....
  4. சீன, இந்திய ஆதரவுடன் மேற்குலகை எதிர்க்க துணிந்த சிறிலங்கா
  5. தமிழா நீ பேசுவது தமிழா?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியுடன் செயல்படுதல் என்பது: விடுதலைப்புலிகளின் " உறுப்பினர்கள் பற்றி" ஊடகங்களினூடாக எதிரிக்கு கட்டிக்கொடுப்பதே.
  2. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  3. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில்: போராட்டத்தைப் பொறுத்தவரையில் கே.பி முடிந்து போன ஒரு அத்தியாயம்
  4. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  5. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. மக்களை மதிக்கும் பண்பாடு விரிவடைய வேண்டும்: மக்களை முட்டாள்களாக நடத்தும் "இணையப் புலிகளுக்கு" மக்கள் தான் பதில் கூற வேண்டும்..........?
  2. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  3. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல