ஜெனிவா வந்தடைந்துள்ள சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:51.52 பி.ப | ஊடகப் பணிமனை ]

சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையினருக்கு விளக்கமளிப்பதற்காக சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு ஒன்று ஜெனிவா வந்தடைந்துள்ளனர்

இந்தக்குழுவினர் நாளை செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள நாளைய சந்திப்பில் சிறிலங்கா அரசு தரப்பினர், சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக அரசு தரப்பின் மறுப்பினை தெரிவிக்கவுள்ளனர். அத்துடன், இந்த சந்திப்பில் சிறிலங்கா அரசதலைவர் மகிந்தவின் விசேட கடிதமொன்றும் கையளிக்கப்படவுள்ளதாக இராஜதந்திரத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஜெனிவா புறப்பட்டுள்ள சிறிலங்கா அரசுத்தரப்பு குழுவில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிறிலங்கா அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள் ஆகியவை தொடர்பாக தமது தரப்பு விளக்கங்களை முன்வைக்கவுள்ள இந்தக்குழுவினர் - சிறிலங்காவில் தற்போது ஊடக ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள் என்பன இடம்பெறவில்லை என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்ற உறுதிமொழியை வழங்கவுள்ளனர் என்றும் அறியவருகிறது.

அத்துடன், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட அனுமதியொன்றை வெளியிடுமாறு சிறிலங்கா அரசுத்தரப்பினர் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கைவிடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. சிறீ லங்கா நாடாளுமன்றத்தில் கண்டதும் கேட்டதும்.........
  2. இரத்தக் கண்ணீர் வடிக்கபோகிறது சிறிலங்கா
  3. கரிகாலன் பிள்ளைகளே: புலிகளின் வீரமும் தியாகமும் பொய்யல்ல...மெய்யே....
  4. சீன, இந்திய ஆதரவுடன் மேற்குலகை எதிர்க்க துணிந்த சிறிலங்கா
  5. தமிழா நீ பேசுவது தமிழா?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியுடன் செயல்படுதல் என்பது: விடுதலைப்புலிகளின் " உறுப்பினர்கள் பற்றி" ஊடகங்களினூடாக எதிரிக்கு கட்டிக்கொடுப்பதே.
  2. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  3. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில்: போராட்டத்தைப் பொறுத்தவரையில் கே.பி முடிந்து போன ஒரு அத்தியாயம்
  4. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  5. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. மக்களை மதிக்கும் பண்பாடு விரிவடைய வேண்டும்: மக்களை முட்டாள்களாக நடத்தும் "இணையப் புலிகளுக்கு" மக்கள் தான் பதில் கூற வேண்டும்..........?
  2. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  3. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல