"எடுத்த காரியம் யாவினும் வெற்றி":
"தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கும்"
[ வியாழக்கிழமை, 14 சனவரி 2010, 12:06.03 பி.ப | ஊடகப் பணிமனை ]

உரிமைக் குரலாக ஒலிக்கும்

தமிழர் திருநாள்- தைப்பொங்கல் நாளான இன்று- தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரலாக- ‘தாய்நாடு’ இணையத்தில் உலா வருகிறது.

  • விரைவில் அச்சிலும் வெளிவரப் போகும் ‘தாய்நாடு’ தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல், சமூக, பண்பாட்டு விடயங்களில் ஆணித்தனமான தனது கருத்துகளை முன்வைக்கத் தயங்காது.

எங்கெல்லாம் தமிழ்த் தேசியத்துக்கும் தமிழ்த் தேசிய இனத்துக்கும் இன்னல் விளைவிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.

  • நடுநிலைமை என்று வெளியுலகுக்குச் சொல்லிக் கொண்டு- தமிழ்த் தேசிய இனத்துக்கு நன்மை தரமுடியாத விடயங்களை உள்ளீர்த்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அதேவேளை, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதை- சொல்லாமல் விடும் தவறையும் நாம் இழைக்க மாட்டோம்.

இன்றைய உலகில் மலிந்து போயுள்ள ஊடக யுத்தத்துக்குள்ளே சிக்கிக் கொள்வதற்கும் நாம் தயாரில்லை.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதே இன்றைய தேவை.

தமிழ் மக்களின் வெளிக் கொணர வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும் போது- வீண் விவாதங்களில் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க முடியாது.

ஊடகங்கள் மக்களின் பிரச்சினையை எடுத்துச் சொல்லும்- அவர்களுக்கு சரியான பாதையைச் சுட்டிக்காட்டும் கருவிகளாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதை வழியிலான நகர்வும் நடப்பும் தமிழ்மக்களின் விருப்பின்பாலானது. அந்த உரிமையை மறுக்கின்ற போக்கில் எம்மால் உடன்பட முடியாது.

மாறிவரும் உலகுக்கு ஏற்றவாறு- நாமும் புதிய புதிய சிந்தனைகளில்- ஆய்வுகளில் இறங்கும்போது தான் தெளிவு பிறக்கும். சரியான பாதையை இனங்காண முடியும்.
மாற்றுச்சிந்தனை என்று புறக்கணிக்கப்படும் போது தான் கருத்துத் திணிப்பும் இயல்பாகவே உருவாக்கம் பெறுகிறது.

தமிழ் மக்களிடத்தில் சரியான கருத்துகளை எடுத்துச் சொல்வதிலும்- ஒரு நடப்பினால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்களைச் சொல்வதிலும் ‘தாய்நாடு’ உறுதியாக இருக்கும்.‘

தாய்நாடு ஒரு புதிய மாற்றத்துக்கான வழிகாட்டியாகவும் இருக்கும்.

அடுத்த இதழில் சந்திப்போம்.

ஒற்றுமையே பலம்

- தாய் நாடு குழுமம் -

வெகு விரைவில் இணையத்திலும் பத்திரிகை வடிவாகவும்

அதுவரை தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரலாக- ‘தாய்நாடு’ இணைப்பில் முழுமையான பதிவு 01-12 

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

வியாழக்கிழமை, 14 சனவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. கறுப்புக்கு தெரியுமோ எங்கள் கண்ணீர்
  2. இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?
  3. தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
  4. சட்டத்திற்கு கட்டுப்பட்டு நிற்குமா? காமம்
  5. சிங்கள தேசத்தில்: 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு': யாரைத் திருப்திப்படுத்த..?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  2. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  3. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
  4. தாய் நிலம்: தன் இனத்தை அழித்து விடுதலை நெருப்பை அணைப்போர்க்கு வரலாறு தீர்ப்பெழுதும்......
  5. விடுதலைப் புலிகள் தனிமனித சொத்தல்ல: "சுருக்கமாக சொன்னால்" அது தமிழ் மக்களினுடைய உயிரிலும் மேலான சொத்தாகும்"
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  2. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  3. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. கவிஞர் சேரன் சொல்கிறார்: தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்று
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல